அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

263 0

அரச துறை ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் இன்று (24) தெரிவித்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவையின் இணை பேச்சாளர்களில் ஒருவரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனைக் கூறியுள்ளார்.

ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட்-19 நிதிக்கு நன்கொடையாக அளிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இது அரச துறையில் ஊதியக் குறைப்புக்கான முயற்சியல்ல என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.