தமிழகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவல் தற்போதுதான் குறைந்து வரும் நிலையில், பெருங்கூட்டம் கூடினால் தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளது. எனவே அனைவரின் நலன் கருதி எனது பிறந்தநாளன்று தொண்டர்கள் யாரும் தன்னை நேரில் சந்திக்க வர வேண்டாம்.
கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் அவரவர் இருக்கும் இடத்திலேயே தங்களால் இயன்ற உதவிகளை ஏழை-எளிய மக்களுக்கு செய்து பிறந்தநாளைக் கொண்டாடுங்கள். மேலும் உடல்நல பரிசோதனைக்காக விரைவில் வெளிநாடு செல்ல இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.