மட்டக்களப்பில் கட்டுத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டவருக்கு விளக்கமறியல்!

177 0

மட்டக்களப்பு- கொக்கட்டிச்சோலை, மணல்பிட்டி பகுதியில் கட்டுத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட  சந்தேகநபரை 14 நாட்களுக்கு தடுத்து வைக்குமாறு நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை, மணல்பிட்டி வீதியில் பயணித்த முச்சக்கர வண்டியினை இராணுவத்தினர் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போதே அம்பிளாந்துரையைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரையை கைது செய்த இராணுவத்தினர், மேலதிக விசாரணைகளுக்காக கொக்கட்டிச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று,  களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றத்தின் நீதிபதி முன்னிலையில் குறித்த சந்தேகநபரை முன்னிலைப்படுத்தியப்போது,  14 நாட்களுக்கு தடுத்து வைக்குமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.