தற்கொலை செய்துக்கொண்ட நபருக்கு கொவிட் தொற்று!

187 0

வீடொன்றில் தற்கொலை செய்துக்கொண்ட நபர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பதுளை ;மஹிலகஸ்தென்ன பகுதியை சேர்ந்த 37 வயதான நபரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் திருமணமாகாதவர் என்பதுடன், உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடால் தனியாக வசித்து வந்துள்ளார் எனவும் காவல்துறை தெரிவிக்கிறது.

அத்துடன், இவர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நபர் தற்கொலை செய்துக்கொண்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.