பல வங்கிகளின் கிளைகள் இன்று திறப்பு

161 0

வாடிக்கையாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட சேவைகளை வழங்க பல கிளைகள் இன்று திறந்திருக்கும் என்று முக்கிய வணிக வங்கிகள் அறிவித்துள்ளன.

சுகாதார அமைச்சின் உத்தரவின் படி, தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட போதிலும், பொது மக்களுக்கு வரையறுக்கப்பட்ட சேவைகளை வழங்க வங்கிகள் செயல்பட முடியும்.

அதற்கமைவாக வர்த்தக நிதி, கருவூல செயல்பாடுகள், சம்பளம் வழங்குதல் மற்றும் வாடிக்கையாளர்களின் பிற அவசர கோரிக்கைகள் அல்லது விசாரணைகளுக்கு பதிலளிக்க வங்கிகள் இன்று திறக்கப்படும்.