கொரோனா தொற்றால் யாழ்ப்பாணத்தில் இருவர் பலி

241 0

கொரோனா தொற்றால் நேற்றும் யாழ்ப்பாணத்தில் இருவர் உயிரிழந்தனர்.

யாழ். போதனா மருத்துவமனையின் ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையிலேயே இவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ். போதனா மருத்துவமனை ஊடாக மாதிரி அனுப்பப்பட்ட 65 வயது ஆண் ஒருவர் தொற்றால் உயிரிழந்தார்.

இதேபோன்று, பருத்தித்துறை ஆதார மருத்துவமனை ஊடாக மாதிரி அனுப்பப்பட்ட 62 வயது ஆண் ஒருவரும் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.