மொரட்டுவ பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. வீடொன்றுடன், இணைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
தீப்பரவலில் வர்த்தக நிலையம் முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மொரட்டுவ பிரதேசசபைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன.
தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.