முகக்கவசங்களை விற்பதாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது

186 0

முகக்கவசங்களை விற்பனை செய்வதாக கூறி சப்புகஸ்கந்தை பகுதியில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 25 வயதுடைய இரண்டு யுவதிகளும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன்போது அவர்களிடம் இருந்து 50 இலட்சம் பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மேலும் 7 இலட்சம் ரூபா பணமும் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.