கைக்குண்டு பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளது!

183 0

கிளிநொச்சி- முகமாலையிலுள்ள கோவானக்குளத்தில் இருந்த கைக்குண்டு பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளது.

குறித்த குளத்தினை அபிவிருத்திக்காக பார்வையிடச் சென்ற இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்னவின் இணைப்பு செயலாளர் சுமுது தலைமையிலான குழுவினரால் குறித்த கைக்குண்டு அடையாளம் காணப்பட்டது.

அதன்பின்னர் குறித்த பகுதியை ஆபத்தான பகுதியாக அடையாளப்படுத்தி, அருகிலுள்ள இராணுவ சோதனைச்சாவடிக்கு சம்பவம் தொடர்பில் குறித்த குழு தகவல் வழங்கியது.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வருகைதந்த படையினர், பாதுகாப்பான முறையில் கைக்குண்டை அகற்றியுள்ளனர்.