நேர்முகத் தேர்வு நாளை நடைபெறாது!

280 0

பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் பதவி_கருநாவல்பற்று தெற்கு, விவாகப்பதிவாளர் பதவி_புதுக்குடியிருப்பு ஆகியவற்றுக்கான நேர்முகத் தேர்வு நாளை(23) இடம்பெறாது எனவும் நேர்முகத் தேர்வுக்கான திகதி பின்னர் அறியத்தரப்படும் எனவும்  முல்லைத்தீவு மாவட்ட செயலகம்தெரிவித்துள்ளது

இதுகுறித்து கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்கள்

பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் பதவி_கருநாவல்பற்று தெற்கு, விவாகப்பதிவாளர் பதவி_புதுக்குடியிருப்பு ஆகியவற்றுக்கான நேர்முகத் தேர்வு நாளை(23) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது

இருப்பினும் நாட்டின் தற்போதைய கொரோனா நிலவரம் மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு என்பன காரணமாக குறித்த நேர்முகத் தேர்வு நாளை (23) இடம்பெறாது எனவும் இதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்