கந்தளாய் அக்போபுர பகுதியில் மான் இறைச்சி 22 கிலோவினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பேரை இன்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மானை வேட்டையாடி இறைச்சியை கொண்டுச் செல்லும் போது காவல்துறையில் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சுற்றிவளைப்பை மேற்கொண்ட வேளை இருவர் கைது செய்யப்பட்டனர்.
அக்போபுர பகுதியைச் சேர்ந்த இருவரும் 31வயது மற்றும் 45 வயதுடையவர்கள் எனவும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நாளைய தினம் கந்தளாய் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.