திருகோணமலை, குச்சவெளி, ஜயநகர் பிரதேசத்தில் 10 இலட்சம் ரூபாவுக்கு அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் 3 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (21) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 3 கிலோ 548 கிராம் நிறையுடைய கேரள கஞ்சாவுடன் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வீடொன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட குறித்த கேரள கஞ்சா, விற்பனை நோக்கில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குச்சவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 41 மற்றும் 49 வயதுகளையுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக குறித்த சந்தேகநபர்கள், கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவுடன் குச்சவெளி காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்