ஸ்பெயினில் பெருகும் கொரோனா – பலி எண்ணிக்கை 83 ஆயிரத்தை கடந்தது

166 0

ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் குணமடைந்தோர் எண்ணிக்கை 40 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் ஸ்பெயின் 10-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 47.70 லட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 83 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும், 6.08 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.