மன்னாரில் 235 கிலோ உலர் மஞ்சள் மீட்பு!

176 0

மன்னார், ஓலைத்தொடுவாய் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 235 கிலோ உலர் மஞ்சள் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடற்படையினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்ட இந்த உலர் மஞ்சள், 7 பொதிகளில் இடப்பட்டு கைவிடப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவற்றை நாட்டுக்குள் எடுத்துவர முடியாதமையினால் கடத்தல்காரர்கள் இவற்றை கடற்கரையில் மறைத்து வைத்துச் சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த உலர் மஞ்சள் பொதிகள் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்படும் வரையில் கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.