நுண் கடன் செலுத்தமுடியாது மூன்று பிள்ளைகளின் தாய் தற்கொலை

289 0

tharkolai_11நிதி நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட நுண் கடனை திருப்பிச் செலுத்த முடியாது மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு விசுவமடு இளங்கோபுரம் மூன்றாம் திட்டம் தேராவில் பகுதியைச் சேர்ந்த அம்பிகைபாலன் ஜெகதீஸ்வரி வயது 32 என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

தற்கொலை செய்யும் முன் அவர் எழுதியதாக சந்தேகிப்படும் கடிதம் ஒன்றும் காணப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் கணவன் கைவிட்டுச் சென்றுள்ளதாகவும் அவர் திரும்பி வரவில்லை எனவும் தனது காணியை விற்று தான் பெற்ற கடன்களை செலுத்துமாறும், தனது இறுதி கிரிகைகள் முடிந்ததும் பிள்ளைகளை சிறுவர் விடுதியில் சேர்த்துவிடுமாறும் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..

கணவனால் கைவிடப்பட்டுள்ள குறித்த பெண்னுக்கு பன்னிரண்டு, மூன்று வயதில் பெண் பிள்ளைகளும், எட்டு வயதில் ஒரு மகனும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதுகுடியிருப்பு காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.