எரிபொருள் பற்றாக்குறை குறித்து ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்ட இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தேசிய ஊழியர் சங்க செயலாளர் ஆனந்த பாலித, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
எரிபொருள் கையிருப்பு மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சரின் அதிகாரப்பூர்வ வீட்டின் மறுசீரமைப்பு செலவு பற்றி கருத்து வெளியிட்டதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேமிப்பில் உள்ள எரிபொருள் 11 நாட்களுக்கு மட்டுமே போதுமானது என நேற்று முன் தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஆனந்த பாலித கூறியிருந்தார்.
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இருப்பதாகக் கூறி மக்களை தவறாக வழிநடத்தியதற்காக அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீஐடி தெரிவித்துள்ளது.