தடுப்பூசி போடாத 60 வயதுக்கு மேற்பட்டோர் உடனடியாக அறிவிக்கவும்: இராணுவத் தளபதி

182 0
இதுவரை எந்தவொரு கொவிட் எதிர்ப்பு தடுப்பூசியும் பெறாத 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
தடுப்பூசி போடப்படும் மையத்துக்கு வர இயலாதவர்களின் வீட்டுக்கு வந்து தடுப்பூசி போடத் தயாராக இருப்பதாகவும் இலங்கையில் கொவிட் தொற்றுக் காரணமாக உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.