கிணற்றில் விழுந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று!

169 0

வவுனியாவில் உயிரிழந்த இரு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் கிணற்றில் விழுந்த பெண் ஒருவர் அயலவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார்.
அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது, சம்பவத்தில் யசிந்தா வயது 28 என்ற குடும்ப பெண்ணே மரணமடைந்துள்ளார்.

இதேவேளை வவுனியா குருமன்காடு பகுதியில் திடீர் என மயங்கி விழுந்த வயதான பெண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்
அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
மரணமடைந்த இருவருக்கும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.