நாளை முதல் பேருந்துகள், புகையிரதங்கள் சேவையில் ஈடுபடாது-திலும் அமுனுகம

194 0

நாளை முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை பேருந்துகள் மற்றும் புகையிரதங்கள் சேவையில் ஈடுபடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், அத்தியாவசிய சேவைகளுக்கு பயணிப்பவர்களுக்காக நிறுவனங்களின் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்தால் மாத்திரம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.