#BREAKING நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு!-பேராசிரியர் சன்ன ஜெயசுமண

224 0

மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் தலைமை பீடாதிபதிகளின் கோரிக்கையை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்று அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமண தெரிவித்தார். இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிக்கை வெளியிட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் தலைமை பீடாதிபதிகள்  கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதால்  ஒரு வார காலத்திற்கு நாட்டிடை முடக்குமாறு கோரியிருந்தனர். இதற்கிடையில் நாட்டில் எவ்வளவு காலம் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது குறித்து இன்று இரவு ஒரு அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர் காமினி லோகுகே கூறினார்.

நாடு முடக்கப்படும் எனவும் ஆனால் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து செயல்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற சந்திப்பின் பின்னரே ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.