வவுனியாவில் நேற்று இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

191 0

வவுனியா – புளியங்குளம் பகுதியில் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்திருந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வவுனியா நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் அவர் வவுனியா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் ஆச்சிபுரம் பகுதியை சேர்ந்த அருணா (வயது 48) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.