எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றிய சம்பவம் தொடர்பான விசாரணையை விரைவாக முடித்து, சந்தேக நபர்களுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாக சட்டமா அதிபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய முறைப்பாடுகள் கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணைகளை மேற்கொள்கின்ற, குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் சார்பாக ஆஜரான அரச சிரேஷ்ட சட்டத்தரணி லக்மினி கிரிஹாகமவினால் இந்த விடயம் முன்வைக்கப்பட்டது..