ஓமந்தையில் தாயும் மனனும் சடலங்களாக மீட்பு

258 0

unnamed-2வவுனியா, ஓமந்தைப் பகுதியில் உள்ள வீட்டுக் கிணறு ஒன்றில் இருந்து தாயும், மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தை காவல்துறையினர் தெரிவித்தனர்.

வவுனியா – ஓமந்தை – பன்றிக்கெய்தகுளம் வீதியில் அமைந்துள்ள வீட்டின் கிணற்றில் இருந்து இவ்வாறு 30 வயதான தாயும் 7 வயதான மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

வெளியே சென்றிருந்த வீட்டார், வீடு திரும்பிய போது, வீட்டில் எவரும் இல்லாத நிலையில், அவர்களை தேடியவேளை, கிணற்றில் அவர்கள் சடலங்களாக இருப்பதை அவதானித்து காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஓமந்தைப் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

unnamed-4 unnamed-1 unnamed-2 unnamed-3 unnamed-4 unnamed-5 unnamed-6 unnamed-7 unnamed-8 unnamed-9 unnamed-10 unnamed