காணிகளுக்காக போராட வேண்டும் – மஹிந்த

247 0

1043953432makindaபொது மக்களுக்கு சொந்தமான காணிகள் அனைத்தும் வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹம்பாந்தொட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணி சீனாவுக்கு வழங்கப்படவுள்ளது.

வேறு பல பகுதிகளிலும் பல நாடுகளுக்கு காணிகள் வழங்கப்படவுள்ளன.

இவ்வாறு பொதுமக்களது காணிகள் அனைத்தும் வெளிநாடுகளுக்கு வழங்கப்படுவதால், இலங்கைக்கு எதுவும் மிஞ்சாமல் போகிறது என்று அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் நாட்டு மக்களின் காணிகளை பாதுகாப்பதற்காக வெளிநாட்டவர்களுடன் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.