எல்லை மீள்நிர்ணய அறிக்கை குறித்து கலந்துரையாடல்

387 0

faizer-mustaphaஎல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள சகல கட்சித் தலைவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இதனை உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா இதனை தெரிவித்தார்.

இந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பிரதேச எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யும் ஆணைக்குழுவினால், இறுதி செய்யப்பட்ட அறிக்கையை பொறுப்பேற்க மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா மறுப்பு தெரிவித்துள்ளார்.

குறித்த ஆணைக்குழுவின் தலைவர் அசோக்க பீரிஸ் உள்ளிட்ட குழுவினர் இன்று அமைச்சிற்கு சென்று குறித்த அறிக்கையை அமைச்சரிடம் கையளித்தனர்.

இந்த அறிக்கையில், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டிருக்கவில்லை.

இந்த நிலையில் அனைத்து பிரதிநிதிகளும் இதில் கைச்சாத்திட்டதன் பின்னர், அதனை தம்மிடம் கையளிக்குமாறு அமைச்சர், ஆணைக்குழுவின் தலைவரிடம் வலியுறுத்தியுள்ளார்.