விபத்தில் ஒருவர் பலி – 9 பேர் காயம்

283 0

1004140999untitled-1கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கேகாலை – மொடகொட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.

விபத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பலியானவர் குறித்த பாரவூர்தியின் சாரதி என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனார்.