ஜாலியவின் விளக்கமறியல் நீடிப்பு

276 0

jaliyaஅமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவின் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரக அலுவலக நிர்மாணிப் பணிகளுக்கான ஒப்பந்த வழங்களுக்காக 2லட்சத்து 50 ஆயிரம் டொலர்கள் கையூட்டல் பெற்றதாக தெரிவித்து அவர் கடந்த நொவம்பர் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 11ஆம் திகதி தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.