புதிய கொவிட் சிகிச்சை பராமரிப்பு நிலையம்!

166 0

பண்டாரவெல பிந்துனுவெவ இளைஞர் சேவை மன்ற கட்டிடம் கொவிட் – 19 நோயாளர்களை பராமரிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கொவிட் – 19 நோயாளர்கள் அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஸ்தாபிக்கப்பட்ட குறித்த இடைநிலை பராமரிப்பு நிலையம் மத்திய பாதுகாப்பு தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் விகும் லியனகேவினால் சுகாதார அதிகாரிகளிடம் அண்மையில் கையளிக்கப்பட்டது.

இந்த இடைநிலை பராமரிப்பு நிலையம் கொவிட் – 19 தொற்றுக்குள்ளான 311 நோயாளர்களை பராமரிப்பதற்கான சகல மருத்துவ வசதிகளை வழங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.