ஏப்ரல்-21 பயங்கரவாத தாக்குதலில் கொழும்பு – கிங்ஸ்பெரி விருந்தகத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்திய மொஹமட் முபாரக்கின் மனைவி உள்ளிட்ட 4 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கின் விசாரணைகள் கோட்டை நீதவான் நீதிமன்றில் நேற்று இடம்பெற்றன.
இதன்போது, அவர்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.