மகளை கொலை செய்த தந்தை கைது!

171 0

காலி மாவட்டம், வாடுவெலிவிட்டிய பிரதேசத்தில் நபர் ஒருவர், தனது 33 வயது மகளை மண்வெட்டியால் தாக்கிப் படுகொலை செய்துள்ளார் என்று காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ரெஷானி கோன்கஹகே என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ள தந்தை, தனது மகளின் தலையில் மண்வெட்டியால் தாக்கியுள்ளார் என்றும், இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த பெண் பத்தேகம வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது