மட்டக்களப்பில் அதிகரிக்கும் தொற்றாளர்கள்-வைத்தியர் நா.மயூரன்

232 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 3 பேர் உயிரிழந்ததையடுத்து 152 ஆக அதிகரித்துள்ளதுடன் 303 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 106 பேரும் , களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 38 பேரும், வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 27 பேரும் , செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 25 பேரும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 பேரும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேருமாக 303 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

ஆகவே வீட்டை விட்டு வரவேண்டாம் அதனை மீறி வெளியில் வருபவர்களுக்கு எதிராக கொரோனா சட்டத்தின் கீழ் கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.