மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு!

199 0

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்தத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனவே இரத்தத்தை தானமாக வழங்க பொது மக்கள் முன்வருமாறு வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பாளர் வைத்தியர் கந்தசாமி கிருஸாந் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

தற்போது கொரோனா காரணமாக இரத்தம் பெறுவது மிகவும் கஷ்டமாக இருக்கின்றது எனவே 18 வயதுக்கும் 58 வயதுக்கும் இடையிலுள்ள சுகதேகியான பொதுமக்கள் இரத்தத்தை வைத்தியசாலைக்கு நேரடியாக வந்து வழங்குங்கள் அல்லது இரத்தத்தை வழங்க கூடிய முகாம்களை ஒழுங்கு செய்து தருமாறு அழைப்பு விடுக்கின்றோம் என அவர் தெரிவித்தார்