ராஜீவ் காந்தி ஜோதி யாத்திரையை துவக்கி வைத்த விஜய் வசந்த் எம்.பி.

173 0

ஆகஸ்ட் 19ஆம் தேதி டெல்லியை சென்றடையும் ராஜீவ் ஜோதி யாத்திரைக்கு கர்நாடக ஐஎன்டியுசி தலைவர் பிரகாசம் தலைமை தாங்குகிறார்.

மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி ஆண்டுதோறும் ஜோதி யாத்திரை நடைபெறுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான ராஜீவ் ஜோதி யாத்திரை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இருந்து  துவங்கி வைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 19ஆம் தேதி டெல்லியை சென்றடையும் இந்த யாத்திரைக்கு கர்நாடக ஐஎன்டியுசி தலைவர் பிரகாசம் தலைமை தாங்குகிறார்.  சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகையுடன் சேர்ந்து, இந்த யாத்திரையை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் முருகானந்தம், காங்கிரஸ் செயல் தலைவர் எம்.ஜி.ராமசாமி, மாவட்ட தலைவர் நாகராஜ், சென்னை மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர்கள் பெர்னாண்டோ, ஜான்சன், செந்தில் குரு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.