கிண்ணியாவில் கைக்குண்டு மீட்பு

167 0

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணியில்  நேற்று முன்தினம்(16)    தனியார் ஒருவருக்குச் சொந்தமான பத்தரகாளியம்மன் கோயில் வளாகத்தில் SFG – 87 ரக கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

நவராத்திரியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட இருந்த தீப் பள்ளயத்துக்குக் குழி ஒன்றை வெட்டும் போது அக்குழியிலிருந்து பிளாஸ்டிக் போத்தலில் அடைக்கப்பட்ட நிலையில் இக் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்துக் காணி உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்தமையை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் அக் கைக் குண்டை மீட்டுள்ளதோடு அதனை செயலிழக்கச் செய்வதற்கான நீதிமன்ற அனுமதியைப்  பெற்று – செயலிழக்கும் விசேட பொலிஸ் அதிரடி படையின் உதவியை நாடியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்