இலங்கையில் உச்சத்தை தொட்ட கொரோனா மரணங்கள்!

187 0

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நேற்று (16) மேலும் 171 பேர் உயிரிழந்துள்ளனதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (17) அறிவித்துள்ளது.

102 ஆண்களும் 69 பெண்களுமே உயிரிழந்துள்ளதுடன், 60 வயதுக்கு மேற்பட்ட 134 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 35 பேர் மரணித்துள்ளதுடன், 30 வயதுக்குக் கீழ் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நாட்டில் இதுவரை 6,434 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.