370 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் ஒருவர் கைது

228 0

கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கிளித் தீவு பகுதியில் 370 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன், சந்தேக நபர் ஒருவர் கடற்படையினரால் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.

கற்பிட்டி முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

வடமேற்கு கடற்படை கட்டளையின் எஸ்.எல்.என்.எஸ் விஜய கடற்படையினர் கற்பிட்டி கிளித் தீவு பகுதியில் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வள்ளம் மூலம் வேறொரு இடத்திற்கு கடத்தவிருந்ததாக சந்தேகிக்கப்படும் 10 உரைப் பைகளில் பொதி செய்யப்பட்ட உலர்ந்த 370 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரும், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வள்ளம் மற்றும் 370 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சின்னப்பாடு சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.