அம்பாறையில் வெடி தாயரிப்பின் போது வெடித்ததில் கணவன் மனைவி படுகாயம்!

169 0

அம்பாறை அளிக்கம்பை பிரதேசத்தில் பன்றிக்கு வெடி வைக்க வெடியை வீட்டில் வைத்து தயாரித்தபோது வெடி வெடித்ததில் கணவன் மனைவி இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (17) பிற்பகல் 4.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று அளிக்கம்பை பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய குலன் மற்றும் அவரது மனைவியான 62 வயதுடைய வெங்கட்மேரி என்பவர்களே இவ்வாறு படுகாயமடைந்தனர்.

ஆலையடிவேம்பு பிரதேச செலயகப் பிரிவிலுள்ள குறித்த பகுதி காட்டை அண்டிய பகுதியான இந்த கிராமத்தில் இரவில் யானைகள் மற்றும் காட்டுவிலங்குகள் கிராமத்தில் ஊடுருவி பயிர் செய்கைகளை நாசப்படுத்திவருவது வழமையானது இந்த நிலையில்  சம்பவதினமான இன்று மாலை 4.30 மணியளவில்  குறித்த வீட்டில் யாணை வெடிகளை பிரித்து அதிலுள்ள மருந்துகளை ஒன்றினைத்து அதனை பன்றிக்கு வெடிக்க வெடிகளை தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தவறுதலாக அந்த வெடிமருந்து வெடித்ததில் கணவன் மனைவி இருவரும் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து படுகாயமடைந்தவர்களை முச்சக்கரவண்டியில் ஏற்றிக் கொண்டு பனங்காடு வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியாது என வைத்தியர் தெரிவித்த நிலையில் வைத்தியர் மீது ஓட்டோசாரதி தாக்கமுற்பட்ட நிலையில் அங்கிருந்து அவர்களை அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.