கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வாரம் அறிவிப்பு

186 0

கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து 30ஆம் திகதி வரை கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

நாட்டில் மூன்று இலட்சத்து 30 ஆயிரம் கர்ப்பிணிகள் வரை இருக்கிறார்கள்.

அவர்களில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் இதுவரை தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளவில்லை.

கர்ப்பிணி தாய்மார் இலங்கையில் பயன்பாட்டிலுள்ள எந்த கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளலாம் என சுகாதார பிரிவினர் பரிந்துரைத்துள்ளனர்.