உலகில் மிக வேகமாக மரணம் சம்பவிக்கும் நாடு இலங்கை – ராஜித

175 0

உலகில் மிக வேகமாகக் கொரோனா மரணங்கள் சம்பவிக்கும் நாடாக இலங்கை உள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கி இணைந்து உலகளாவிய ரீதியிலான கொரோனா மரணங்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளன.

இதில் இலங்கை எந்த இடத்தில் உள்ளது என்பது தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது.

உலக தகவல்களுக்கு அமைய கொரோனா வைரஸ் பரவலில் நமது நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. அதிகளவு கொரோனா மரணங்கள் சம்பவிக்கும் இரண்டாவது நாடாக இலங்கை உள்ளது.

ஒரு வாரத்துக்கு முன்னர் எடுத்துக்கொண்டால் நமது நாடு நான்காவது இடத்தில் உள்ளது.

தொற்றாளர்கள் உயிரிழக்கும் சதவீதத்தைக் குறைத்து அல்லது அதிகரித்துப் பார்த்தால் இலங்கை முதலாவது இடத்தில் உள்ளது.

உலகில் மிக வேகமாகக் கொரோனா மரணங்கள் சம்பவிக்கும் நாடாக இலங்கை உள்ளது.

நமது நாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்று அமெரிக்காவின் ஜோன் ஹொப்கின் பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.