இளைஞர்கள் இருவர் மீது தாக்குதல்!

155 0

காலி மாவட்டம், ரத்கம பிரதேசத்தில் இளைஞர்கள் இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளனர் எனவும், ஓர் இளைஞரின் இரு கைகளும் வெட்டப்பட்டுள்ளன எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனனர்.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த இரு இளைஞர்களும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஐந்து அல்லது ஆறு பேர் இணைந்து குறித்த இளைஞர்கள் இருவர் மீதும் வீதியில் வைத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.