நாட்டில் நேற்றைய தினம் வீதி விபத்துக்கள் காரணமாக பத்து உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவற்றில் ஒன்பது பேர் மோட்டர் சைக்கிளில் பயணித்தவர்கள் ஆவர். ஒருவர் முச்சக்கர வண்டியில் பயணித்தவர் ஆவார்.
நாட்டில் பதிவுசெய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 8.3 மில்லியன் மற்றும் அதில் 60 சதவீதம் மோட்டார் சைக்கிள்கள் என பட்டியலிடப்பட்டுள்ளது.