உரிய தரப்பினரின் ஆலோசனை கிடைத்தால் நாட்டை முடக்கத் தயார் – சன்ன ஜயசுமன

136 0

நாட்டில் முடக்க நிலையை அமுலாக்குவதற்கு, சுகாதாரத் துறையும், பாதுகாப்புத்துறையும் உத்தியோகபூர்வமாக ஆலோசனை வழங்குமாயின், அதனை நடைமுறைப்படுத்த தாம் பின் நிற்கப்போவதில்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எனினும், அன்றாட தொழிலை நம்பி இருக்கும் மக்கள் வாழ்வதற்கான முறைமை ஒன்று இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, பொதுமக்கள் சுய கட்டுப்பாட்டுடன், வீடுகளில் இருந்து வெளியேறுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

தற்போதைய தீர்மானமிக்க சந்தர்ப்பத்தில், அனைத்து விடயங்கள் குறித்தும் சிந்தித்தே, நாடு என்ற அடிப்படையில் தீர்மானம் எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.