இன்று தீர்மானமிக்க கட்சித் தலைவர்களின் கூட்டம்!

145 0

நாடாளுமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்காக இன்று (16) கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (16) முற்பகல் 11 மணிக்கு இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

கொவிட்-19 பரவல் நிலைமைக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துதல் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட உள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றில் சேவையாற்றும் சில பிரிவுகளின் அதிகாரிகளுக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதை அடுத்து, அவர்களுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பதற்காக, சி.சி.ரி.வி காணொளிக் காட்சிகள் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.