இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் வீடுகளிலோ அல்லது விடுதிகளிலோ எவ்வித நிகழ்வுகளையும் நடத்த முடியாது என்றும் உணவகங்களில் 50 சதவீதமானோர் மட்டும் அமர்ந்து உணவுண்ண முடியும் என்றும் இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17.08.21) நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை அனைத்து திருமண நிகழ்வுகளும் இரத்து செய்யப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.