தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 108 பேர் கைது!

178 0

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாட்டை மீறி நேற்றைய தினம் மேல் மாகாணத்திற்குள் நுழைய முற்பட்ட 582 பேர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரையில் 54,359 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலைகளிலும் விஷேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்