காணிப்பதிவுக் காரியாலயத்திற்கு மீண்டும் பூட்டு

179 0

கல்முனை காணிப்பதிவுக்  காரியாலயத்தில் பணி புரியும் ஊழியர்கள் இருவருக்குக்  கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளத்தால் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது.

இதனால்  26 ஆம் திகதிவரை மக்கள் சேவைகளைப்  பெறமுடியாது இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பும் இக்காரியாலயம்  கொரோனாத் தொற்றுக் காரணமாகப்  பூட்டப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.