மேல்மாகாணத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன

158 0

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறி மேல்மாகாணத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட 382 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், நேற்றைய தினம் 4,500 வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில், மாகாணங்களுக்குள் பிரவேசிக்கும் குறுக்கு வீதிகளிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.