அதிபர் – ஆசிரியர் சங்கத்தினருக்கு அமைச்சரவை உபக்குழு அழைப்பு

180 0

ஆசிரியர் – அதிபர்களின் வேதன முரண்பாடு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபக்குழு தமது தரப்பினருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக ஆசிரியர் – அதிபர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

அதன் பிரதிநிதி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை குறிப்பிட்டார்.

இந்தநிலையில் எதிர்வரும் செவ்வாய் கிழமை முரண்பாடுகள் குறித்து அமைச்சரவை உபக்குழுவில் அறிவிக்குமாறு தமக்கு தெரியப்படுத்தபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சந்திப்பு அன்றைய தினம் மாலை 6 மணியளவில் அமைச்சர் விமல் வீரவன்சவின் இல்லத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் இணையவழி கற்பித்தல் செயற்பாடுகளில் இருந்து விலகி அதிபர் – ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை 34வது நாளாக இன்றும் தொடர்கின்றது.