கிழக்கிலிருந்து போதையை முற்றாக ஒழிக்கும் ஆண்டாக 2017ஆம் ஆண்டு அமையும்

307 0

happy-new-year2017-55கிழக்கிலிருந்து  போதையை முற்றாக ஒழிக்கும்  ஆண்டாக 2017ஆம் ஆண்டு அமையும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.   அதன் முதற்கட்டமாக போதைக்கு எதிரான மாபெரும் பேரணி  எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறிப்பாக மட்டக்களப்பு  மாவட்டத்தில் தற்போது மதுபான பாவனை அதிகரித்திருப்பதுடன்  சில பகுதிகளில் ஹெரோயின் உள்ளிட்ட சில   போன்ற போதைப்பொருட்களின் பாவனையும் அதிகரித்து வருகின்றது என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ள அவர் இதற்கு  சில  பாடசாலை மாணவர்களும் இலக்கு வைக்கப்படுகின்றமை  வேதனை தருவதுடன் இதனூடாக கிழக்கு இளைஞர்களின்  எதிர்காலம் கேள்விக்குட்படுத்தப்படுவதுடன் அவை முளையிலேயே கிள்ளி எறியப்படாவிட்டால் பாரிய அபாயகரமான நிலை உருவாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி ஜனாதிபதி தலைமையில் ஏறாவூரில் இருந்து முன்னெடுக்கப்படவுள்ள போதைப் பொருளுக்கு எதிரான மாபெரும் பேரணியில் கிழக்கின் சுபீட்சத்தை கனவு கண்டுள்ள அனைவரும் கைகோர்க்க வேண்டும் எனவும் முதலமைச்சர்; வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் போதைப்பொருள் விநியோகஸ்தர்கள் மற்றும் பாவனையாளர்கள் குறித்த தகவல்களை மக்கள் உடனடியாக வழங்குவதற்கு போதைப்பொருளுக்கு எதிரான செயலணியொன்று அன்று ஜனாதிபதியினால் கிழக்கில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளதுடன் அதன் ஊடாக தகவல் வழங்குபவர்களின் இரகசியத் தன்மையும் பாதுகாக்கப்படும் எனவும் கிழக்கு முதலமைச்சர் உறுதியளித்தார்.