சிறைக்கைதிகளை சந்திக்க மறு அறிவித்தல் வரை அனுமதியில்லை

185 0

கொவிட் தொற்றின் தீவிர பரவல் காரணமாக மறு அறிவித்தல் வரை அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளை சந்திக்க பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என சிறைச்சாலை பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் (நிர்வாகம்) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, வழக்கு நடவடிக்கை தொடர்பில் கைதிகளை சந்திக்க சட்டத்தரணிகளுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும், சுகாதார வழிமுறைகளின் கீழ் வழக்கு தொடர்பான ஆவணங்கள் மாத்திரம் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் சிறைச்சாலை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.